விமான பணிப்பெண்ணை கடித்த பயணி!!

விமானப் பணிப்பெண்ணை கடித்த 55 வயதான பயணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

159 பயணிகளை ஏற்றிச் சென்ற ANA விமானம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தது.விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்ணை கடித்துள்ளார்.

இதனால் விமானம் உடனடியாக ஹனேடா விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்றது.அங்கு அந்த நபர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். சிலர் இச்சம்பவத்தை zombie திரைப்படக் காட்சிகளுடன் ஒப்பிட்டனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.