முதலைப் பண்ணையின் உரிமையாளர் முதலையை கொன்றுவிட்டார்!! காரணம் என்ன??

முதலைப் பண்ணையின் உரிமையாளர் முதலையை கொன்றுவிட்டார்!! காரணம் என்ன??

தாய்லாந்தின் வடப்பகுதியில் கனத்த மழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் முதலைப் பண்ணை ஒன்றில் 17 வருடங்களாக வளர்ந்து வந்த 125 முதலைகளை கொன்று விட்டனர்.

அப்பகுதியில் வெள்ளம் அதிகமாக இருப்பதால் முதலைகள் தப்பித்து மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினால் அந்த முடிவை எடுத்ததாக முதலைப்பண்ணை உரிமையாளர் கூறினார்.

மேலும் பண்ணையின் சுவர்கள் மழையால் சேதம் அடைந்ததாக உரிமையாளர் இத்தகைய முடிவு எடுத்ததாகவும் கூறினார். மூன்று மீட்டர் நீளம் கொண்ட சியாம் வகை முதலைகள் அங்கிருந்து தப்பி ஊர் மக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதனால் வேறு வழி இல்லாமல் 17 ஆண்டுகளாக வளர்த்த முதலைகளை கொன்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.