மோதலை தடுக்க முயன்ற முதியவருக்கு கத்தி குத்து!!

மோதலை தடுக்க முயன்ற முதியவருக்கு கத்தி குத்து!!

சிங்கப்பூரில் 80 வயது முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 55 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று ரெட்ஹிலில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இரவு 9.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நபர்களுக்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்ற போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 80 வயது முதியவருக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டன.

அவருக்கு சிறிய அளவில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.