விடுதலையாகி வெளியே வரும் பெண் கைதிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவு!!

விடுதலையாகி வெளியே வரும் பெண் கைதிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவு!!

சிங்கப்பூரில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் குற்றம் செய்யும் பெண் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சிறையிலிருந்து வெளியே வந்த பின் மீண்டும் குற்றம் புரிந்தவர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு சுமார் 20 சதவீதமாக பதிவாகியிருந்தது.

2021-ஆம் ஆண்டு அது 15 சதவீதமாக பதிவாகி உள்ளது.

இந்த முன்னேற்றத்திற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு உதவிகள் அதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு உதவியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.