Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து எண்ணிக்கை விழுக்காடு உயர்வு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாலைப் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நோய் பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையில் இது தொடர்ந்து குறைவாகவே இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு குறிப்பாக மூத்தோர்,மோட்டார் சைக்கிளோட்டிகள் சமந்தப்பட்ட விபத்துகள் அதிகரித்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து மரண எண்ணிக்கையை 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று அதிகரித்துள்ளது.

அதாவது 108-ஆகப் பதிவாகி உள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.