அடுத்த மாத இறுதியில் மூடப்படும் நிலையம்!!

அடுத்த மாத இறுதியில் மூடப்படும் நிலையம்!!

அடுத்த மாத இறுதியில் NEWater வருகையாளர் நிலையம் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது 2003-ஆம் தேதி ஆண்டில் திறக்கப்பட்டது.

அன்றைய நாளிலிருந்து இதுவரை சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

சிங்கப்பூரின் உயர்தரச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பற்றி இருவழித் தொடர்பு கொண்ட கண்காட்சிகள், சுற்றுலாக்கள் மற்றும் பயிலரங்குகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாத இறுதியில் நிலையத்திற்கு அருகே உள்ள பிடோக் புதுநீர் ஆலையும் அதன் செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூரின் பழமையான புதுநீர் தயாரிப்பு ஆலை ஆகும்.

புதிய புதுநீர் ஆலையில் சாங்கி நீர் மீட்பு ஆலையில் அமைக்கப்படும்.

இந்த புதிய நீர் ஆலை பழமையான புதுநீர் ஆலைக்கு பதிலாக கட்டப்பட உள்ளது.

இது பிடோக் புதுநீர் ஆலையை விட கூடுதல் உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும்.