சிங்கப்பூரில் Class 4 டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் வந்த புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் Class 4 டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் வந்த புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் Class 3 லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் எளிது.
ஆனால் Class 4 License எடுப்பதற்கு நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து விளக்க கடிதம் அவசியமானதாக இருந்தது. அதாவது எதற்காக உங்களுக்கு இந்த லைசன்ஸ் தேவைப்படுகிறது என்ற விளக்க கடிதம் இருந்தால் மட்டுமே உங்களால் Class 4 டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முடியும். இந்த கடிதத்தை பெரும்பாலான கம்பெனிகள் தருவது இல்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கம்பெனியின் கடிதம் இல்லாமலே, நீங்கள் உங்களது Class 3 மற்றும் 3C லைசென்ஸை Class 4 டிரைவிங் லைசென்ஸ்-ஆக மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

இது தெரிந்தவுடன் பலரும் போட்டிபோட்டுக் கொண்டு Driving school சென்றனர்.

இதில் அதிகபட்சமாக இன்று(2/09/2024) 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக டிரைவிங் ஸ்கூல் சற்று பரபரப்பானது. ஒரு சிலர் இரவு 12 மணியிலிருந்து காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று முதலில் சென்ற 40 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

அதேபோல், இனிமேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக தங்கள் வேலை செய்யும் கம்பெனிகளில் இருந்து கடிதம் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பையும் டிரைவிங் ஸ்கூலில் வேலை செய்பவர் சொல்லுவது போல் ஒரு வீடியோ வைரல் ஆகி உள்ளது.

பெரும்பாலானோர் கம்பெனிகளின் கடிதம் இல்லாததாலேயே இன்னும் Class 4 லைசன்ஸ் எடுக்க முடியாமல் உள்ளனர்.

இதற்கு மேல் கம்பெனியின் கடிதம் இல்லாமல் யாரும் லைசன்ஸ் எடுக்க செல்ல வேண்டாம்.

இது போன்ற தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Sgtamilan இனிய பக்கத்தில் இணைந்திருங்கள்.