கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!!

கவனக்குறைவால் குழந்தையை காருக்குள்ளேயே விட்டு சென்ற தாய்!!

மலேசியாவில் நான்கு மணி நேரம் காருக்குள் இருந்த ஐந்து வயது சிறுமி உயிர் இழந்தார்.

செலாங்கூரில் உள்ள ஷா ஆலன் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த சிறுமியின் 34 வயதான தாய், குழந்தை காரில் உறங்கிக் கொண்டிருந்ததை மறந்து விட்டுச் சென்றார்.

இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது.

மாலை 6 மணி அளவில் தான் குழந்தை காருக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார்.

காருக்குள் மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.