இரண்டாவது பெரிய விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்!! துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்!!

இரண்டாவது பெரிய விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்!! துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்!!

டென்மார்க்கில் பில்லுண்ட் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விமான நிலையம் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் என்று கூறப்படுகிறது.

மிரட்டல் வந்தவுடனே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விமான நிலையத்தில் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.

பயணிகள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவர்களை பாராட்டுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டது.