காவல்துறை அதிகாரியை உதைத்த நபர்!! எப்போது நடந்தது? எதனால் இந்த தாக்குதல்?

காவல்துறை அதிகாரியை உதைத்த நபர்!! எப்போது நடந்தது? எதனால் இந்த தாக்குதல்?

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கிய 49 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் செம்பவாங் டிரைவில் ஜனவரி 23ஆம் தேதி அன்று இரவு 9.15 மணி அளவில் நடந்தது.

செம்பவாங் குடியிருப்பில் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த நபர் தன்னை பாதுகாத்துக் கொள்ள 52 வயது பெண் ஒருவரை பிணையக் கைதியாக பிடித்து வைத்தார்.

நெருக்கடிநிலை பேச்சு வார்த்தை பிரிவு, சிறப்பு செயல்பாட்டுக் கட்டளை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மூன்று மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு, அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது அதிகாரிகள் குடியிருப்பு பிரிவுக்குள் நுழைந்து அந்த நபரை கைது செய்தனர்.

அப்போது அவர் ஒரு அதிகாரியை உதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.