பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரான நபர்…!!!!

பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரான நபர்...!!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 48 வயது பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி தானாக ஸ்டேஷனுக்கு வந்து ஒரு பெண்ணை குத்தியதாக அதிகாரிகளிடம் கூறினார்.

இவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கடையநல்லூர் தெருவில் உள்ள உணவுக்கடையில் அதிகாரிகள் 48 வயது மதிக்கத்தக்க பெண் அசைவற்று கிடந்ததை கண்டனர்.

பின்னர் அவரது மரணத்தை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் அவர் செப்டம்பர் 6 அன்று பிற்பகல் 1.36 மணியளவில் புக்கிட் மேரா ஈஸ்ட் காவல் நிலையத்தில் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபரும், உயிரிழந்த பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்திருப்பது தெரியவந்தது.

அந்த நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 8) கொலைக் குற்றம் சாட்டப்பட உள்ளது.

கொலை குற்றம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us on : click here ⬇️