பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!!

மலேசியாவின் பெனாங் மாநிலத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

அவர் பெனாங்கில் உள்ள பட்டர்வர்த் நகரில் 42 வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிறகு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் டிசம்பர் 19ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாலத்தில் இருந்து குதித்த அந்த நபரை மீனவர்கள் காப்பாற்றினர். பிறகு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துரதிஷ்டவசமாக அந்த பெண் இறந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் CCTV-யில் பதிவாகியுள்ளதாகவும், அதுவே இந்த கொலைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.