சிங்கப்பூர் மாணவியை தாக்கிய கொரியர்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவியை தாக்கிய குற்றத்திற்காக கொரியாவைச் சேர்ந்த 30 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 12ஆம் தேதி அன்று தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் திடீரென்று மாணவியின் முகத்தில் பல முறை குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர் ஆட்டிசம் குறைபாடு உடையவர் என்றும் அவர்கள் கூறினர்.இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.