இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி!!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தேவகோட்டை கல்லல் காளையார் கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சிவகங்கை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் சார்பில் தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு அழைப்பிதழை கட்சி நிர்வாகிகளுக்கும் பார்க்கவ குல சொந்தங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.


திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மார்ச் 2ம் தேதி இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி செஞ்சை, தேவகோட்டை, இராம்நகர், கல்லல், மாதவராயன்பட்டி, முத்துப்பட்டி, குருங்களிப்பட்டி, காளையார்கோவில், சூசையப்பர்பட்டினம், காட்டாத்தி, சானாஊரணி, பள்ளித்தம்மம், புலியடிதம்மம், கல்லுவழி, முடுக்கூரணி, ஒட்டனம், மருதக்கண்மாய், ஆண்டிச்சியூரணி, வலையன்பட்டி ஆகிய கிராமங்களில் வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அப்போது அழைப்பு கொடுக்க வந்த நிர்வாகிகளுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும், சிவகங்கை மாவட்ட தலைவருமாகிய அமலன் சவரிமுத்து தலைமையில்,பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் மைக்கிலின் ஆல்பர்ட் ராஜா முன்னிலையில்
IJK மாவட்ட பொருளாளர் திரு. J .ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர், செபஸ்தி வேதராஜா, இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயசீலன்,
மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட வேந்தர் பேரவை செயலாளர் ஜெரோம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பிரிட்டோ மற்றும் சிவகங்கை மாவட்ட பார்க்கவ குல முன்னேற்ற சங்க மற்றும் பார்க்கவ குல சங்க நிர்வாகிகள் மற்றும் IJK முன்னாள் மாநில மகளிரணி பொருப்பாளர் பவுலின் தார்சிஸ் மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.