Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய மோசடி அதிகரிப்பு!

கிருமி பரவல் காலகட்டத்தில் இணையத்தின் தேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

இதனால் இணைய குற்றங்களும் அதிகரித்தன என்று காவல்துறை தெரிவித்தது.

மற்ற குற்றங்களை விட இணையத்தில் ஏமாற்றும் குற்றங்கள் அதிகரித்தன.

கடந்த 2022-ஆம் ஆண்டு 33,600 க்கும் அதிகமான இணைய குற்றச் சம்பவங்களும், மோசடிகளும் பதிவாயின.

600 மில்லியன் வெள்ளிக்கு மேல் பொதுமக்கள் பறி கொடுத்து உள்ளனர்.