அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!! தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற நபர்!!

பாம்பு கடித்து இறந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் இங்கு ஒருவர் அந்த பாம்பையே கடித்து கொன்றுள்ளார். அனைவரையும் வியக்க வைக்கும் இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது.

48 வயதுடைய Boljulio Aleria என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 3 மீட்டர் நீளமுல்ல மலைப்பாம்பு குறுக்கே வந்துள்ளதாகவும், அவரை தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த மலைப்பாம்பு அவரின் இடுப்பைச் சுற்றி இறுகத் தொடங்கியது.

உயிருக்கு பயந்த அவர் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி கொள்ள நினைத்தார். உடனே அவர் பாம்பின் கழுத்தை கடித்தார். மலைப்பாம்பு சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு அவரை விடுவித்தது. அதன்பின் அது உயிரிழந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்தவுடன் இறந்த பாம்பை எடுத்து கொண்டு வீடு திரும்பினார்.

பிலிப்பைன்ஸில் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாம்பை உணவாக உண்பது வழக்கம்.