மனைவியின் சிங் பாஸ் விவரங்களை விற்ற கணவர் தற்போது கம்பி எண்ணுகிறார்…!!!

மனைவியின் சிங் பாஸ் விவரங்களை விற்ற கணவர் தற்போது கம்பி எண்ணுகிறார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மனைவியின் சிங்பாஸ் விவரங்களை விற்ற கணவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

43 வயதான அப்துல் சர்ஹான் அப்துல் ரோனிக்கு செப்டம்பர் 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

டெலிகிராம் செயலியில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் 1,000 வெள்ளி தருவதாக உறுதியளித்ததன் பேரில் அவர் தனது மனைவியின் சிங்பாஸ் விவரங்களை கொடுத்துள்ளார்

டெலிகிராமில் அந்நியர் 1,000 வெள்ளி செலுத்தாமல் அவரை ஏமாற்றினார்.

ஆனால் அந்த சிங்பாஸ் விவரத்தை பயன்படுத்தி, 76 வயது முதியவரிடம் சுமார் 400,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பணத்தை அவரால் மீட்க முடியவில்லை.

மோசடி குற்றங்கள் தொடர்பாக சிங்பாஸ் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here ⬇️