தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்...!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது.

தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது.

நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது.

நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய் ஒரு நொடி கூட தாமதிக்காமல் நீர் நாயுடன் போராடி குழந்தையை கரைக்கு இழுக்க முயன்றார்.

நீர்நாய் அவரின் கையை கவ்வியது இருந்தாலும் பிடியை விடாமல் தொடர்ந்து நீர் நாயுடன் போராடி குழந்தையை மீட்டார்.

பின்பு அவர் குழந்தையுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

நீர்நாய் இருவரையும் சிறிது தூரம் துரத்தியதாக உள்ளூர் மீன் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையின் தலை, முகம் மற்றும் கால்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய தாயின் துணிச்சலான செயலை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.