கொட்டி தீர்த்த கனமழை!! ஏற்பட்ட திடீர் வெள்ளம்!!

கொட்டி தீர்த்த கனமழை!! ஏற்பட்ட திடீர் வெள்ளம்!!

ஜூன் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கால் புறநகர்ப் பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றது.

13 மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், மேலும் வசிப்பவர்களிடம் இருந்து உதவிக்காக அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை கனமழையால் சிட்னியின் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஏப்ரல் மாதம் 150 க்கும் மேற்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்டதாகவும் குறிப்பிட்டது.