தெங்கா பகுதியில் திறக்கப்பட்ட முதல் பேரங்காடி மற்றும் உணவகம்!!

தெங்கா பகுதியில் திறக்கப்பட்ட முதல் பேரங்காடி மற்றும் உணவகம்!!

தெங்கா பகுதியில் திறக்கப்பட்ட முதல் பேரங்காடி மற்றும் உணவகம்…
சிங்கப்பூர்:தெங்கா பகுதியில் முதல் பேரங்காடி மற்றும் உணவகம் திறக்கப்பட்டது.

அவை நேற்று (ஜூன் 28) முதல் செயல்படத் தொடங்கின.

உள்ளூர்வாசிகள், வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கும், தங்கள் குடும்பத்தினருடன் உணவை உண்டு மகிழ்வதற்கும் ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

பிளாண்டேஷன் பிளாசாவில் ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட் மற்றும் Koufu உணவகம், மேக்டானல்ஸ் விரைவு உணவகம் போன்றவற்றை அமைக்க வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் உதவியது.

மேலும் அப்பகுதிகளில் ‘டாய்சோ’ கடையும் திறக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் காலாண்டில் மேலும் வருடாந்திர கடைகளை படிப்படியாக திறக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய குடியிருப்பு பகுதியான தெங்காவில் போதிய வசதிகள் இல்லை என குறைகள் எழுந்தன.

இதை நிவர்த்தி செய்ய நடமாடும் மளிகை வாகனங்கள், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் முதலியவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பேரங்காடி திறக்கப்பட்டுள்ளதால் வாகன விற்பனை சேவை நிறுத்தப்படும் என கழகம் தெரிவித்துள்ளது.