கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய டிரைவர்!! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிய டிரைவர்!! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

கவனக் குறைவாக வாகனம் ஓட்டி சிறுமியின் மரணத்திற்கு காரணமான 23 வயதான வேன் டிரைவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று பிற்பகல் யுவான் சிங் சாலையில் நடந்தது.

இந்த விபத்து குறித்து 3.47 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொரு நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஜனவரி 23-ஆம் தேதி இதே போன்ற விபத்து ஏற்பட்டு 4 வயது சிறுமி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.