மது அருந்திவிட்டு பேருந்தை ஓட்டிய டிரைவர்!!

மது அருந்திவிட்டு பேருந்தை ஓட்டிய டிரைவர்!!

சிங்கப்பூரின் பெடோக்கில், தனியார் பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 26 ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த சம்பவம் குறித்து காலை 9:30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

33 வயதான பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் மது அருந்திவிட்டு பேருந்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.

பேருந்து மரத்தில் மோதிய போது பேருந்தில் யாரும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.