அதிகாரியின் கட்டளையை மீறி செயல்பட்டு மோசமான செயலை செய்த டிரைவர்!!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள குடிநுழைவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின் அதிகாரியை, பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கார் டிரைவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த டிரைவர் 38 வயதுடைய சிங்கப்பூரர் என்று தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த அதிகாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த நபரின் காரில் எரிபொருள் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ICA அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரி கூறினார்.

அதை ஏற்க மறுத்த அந்த நபர் காரை முன்னோக்கி செலுத்தியுள்ளார்.

அவரை தடுக்க முயன்ற அதிகாரியை பல மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நபரின் மோசமான செயலுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, S$5000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.