அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!!

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!!

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் ஒருவர் பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு விளக்கம் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு சுத்தமான சிறிய கத்தியை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியாததால் அவர் அவ்வாறு செய்ததாக கூறினார்.

அறுவை சிகிச்சை நிபுணரின் இத்தகைய செயல் சக ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை தேட முடியவில்லை என்ற அவரின் பதிலுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சசெக்ஸில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் செய்தது தவறு என்று கூறியுள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நபர் நல்லபடியாக உயிர் பிழைத்தார்.

இதே மருத்துவர் கடந்த 2 மாதங்களில் செய்த அறுவை சிகிச்சையில் 3 நோயாளிகள் பின்னர் உயிரிழந்தனர்.

போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.