திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!!

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!!

தனது தாயைக் கொன்று சூட்கேஸில் அடைத்த பெண்ணுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது ஜனவரி 17-ஆம் தேதி வழங்கப்பட்டது.

இச்சம்பவம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஹெதர் மேக் என்ற அந்த பெண் தனது காதலனுடன் சேர்ந்து, தனது தாயை அடித்துக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிறகு அந்த உடலை சூட்கேஸில் வைத்து டாக்ஸியில் விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் மேக்கின் தாயார் நாசி எலும்பு மற்றும் தாடை எலும்பு முறிந்ததால் இறந்ததாக தெரியவந்தது.

மேக்கின் காதலனுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அவர் இந்தோனேசியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.