இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது….

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29.

2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில் 510 ரன்களும்,25 T20 போட்டிகளில் 374 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், ஆசியா போட்டிகளிலும், உலக கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் இந்திய அணியில் தேர்வாகி இருப்பது தனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று கூறினார். இது குறித்து அவர்,உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் நான் தேர்வானது உணர்வுபூர்வமானது.

உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். மேலும் முன்மொழியபட்ட தேர்வுக்கான வீரர்களின் பட்டியலில் கூட நான் இருந்திருக்க மாட்டேன் என்பதும் கூட தான் அறிந்ததே என்று கூறினார்.

IPL சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தான் முடிவு செய்ததாக கூறினார்.அதற்காக தன் போனை சுவிட்ச் ஆப் செய்து தனது முழு கவனத்தையும் ஆட்டத்தின் மீது செலுத்தியதாக கூறினார். அணியை வெற்றி பெற செய்வதே தனது குறிக்கோளாக கொண்டதாக கூறினார்.

IPL இல் சிறந்து விளையாடினால் தான் உலக கோப்பையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நினைத்ததாக கூறினார்.

உலகக் கோப்பை தொடரில் அதுவும் உலகின் சிறந்த அணியில் விளையாடுவது சிறப்பான தகுதியாகும் என்று தெரிவித்தார்.