தொடர்ந்து சூறாவளி,வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு……மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை….

அண்மையில் சீனாவில் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளியாலும்,வெள்ளத்தாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.சில பகுதிகளில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி(நாளை) வரை பலத்த கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதோடு 13 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வந்த வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது