நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் நிறுவனம்!!

சமூக ஊடக நிறுவனமான Tiktok நூற்றுக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனத்தை tiktok செலுத்த உள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தெரிகிறது.

மலேசியாவில் 500 க்கும் குறைவான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Tiktok செய்தித்தொடர்பாளர் கூறுகையில் வீடியோ உள்ளடகத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.