பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!!

பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!!

சிங்கப்பூர் : பெடோக் பகுதியில் ஜூன் 27ஆம் தேதி பயங்கர விபத்து நடந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SCDF தெரிவித்தது.

அவர்களில் 44 மற்றும் 54 வயது உடைய இரண்டு டிரைவர்கள், மீதமுள்ள 7 பேர் பயணிகள்.

அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும் ஜூலை 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு தனா மேரா கெச்சில் சாலை மற்றும் புதிய அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் இந்த விபத்து நேர்ந்தது.

அங்கு இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த வீடியோ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் வெள்ளைநிற கார் கவிழ்ந்து இருப்பதை காணலாம்.மேலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை சம்பவ இடத்தில் இருப்பதையும் காணலாம்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.