விசாரணை முடியும் வரை சிற்றுண்டியில் சுய உணவு பகுதி தற்காலிகமாக மூடப்படும்!!

விசாரணை முடியும் வரை சிற்றுண்டியில் சுய உணவு பகுதி தற்காலிகமாக மூடப்படும்.

சிங்கப்பூரில் One Raffles Quay- இல் உள்ள ByteDance நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுமார் 60 பேருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நேற்று(ஜூலை 30) மாலை நடந்தது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் 17 அவசர மருத்துவ உதவி வாகனங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் ByteDance நிறுவனத்தில் உணவு உண்டதாக கூறப்படுகிறது.

அலுவலகத்தின் 26 ஆம் மாடியில் உள்ள சிற்றுண்டிலிருந்து திரும்பிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.