கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் கொடூரச் செயல்…!!!

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் கொடூரச் செயல்...!!!

ரஷ்யாவில் உள்ள பள்ளி ஒன்றில் 13 வயது மாணவர் ஒருவர் நான்கு பேரை சுத்தியலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஜகஸ்தானின் எல்லையில் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள பள்ளி எண் 68 ல் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

காயமடைந்தவர்களில் 13 வயதுடைய இரண்டு மாணவிகள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய நபரிடம் கத்தி மற்றும் துப்பாக்கி இருந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய ஏழாம் வகுப்பு மாணவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்ற எந்த காரணமும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக செல்யாபின்ஸ்க் மாநில ஆளுநர் அலஸ்கி டெக்ஸ்லர் தனது எக்ஸ் தளத்தில் பள்ளியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இதை கவனிக்கவில்லையா? சுத்தியலுடன் பள்ளிக்கு மாணவர் நுழைந்தது எப்படி? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

Follow us on : click here ⬇️