நான்கு மாதங்களாக காணாமல் போன சிறுவன் மீட்பு!!

நான்கு மாதங்களாக காணாமல் போன சிறுவன் மீட்பு!!

சிங்கப்பூரில் நான்கு மாதங்களாக காணாமல் போனதாக கூறப்பட்ட 14 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று மாலை 6.25 மணியளவில் அங் மோ கியோவில் கடைசியாக காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுவனைப் பற்றிய தகவலுக்காக போலீஸார் மார்ச் 5ஆம் தேதி அன்று காணாமல் போன சிறுவனைப் பற்றி தகவல்கள் தெரிந்தால் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மார்ச் 20ஆம் தேதி அன்று சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் அந்த சிறுவன் எங்கு, எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.