Singapore news

சிங்கப்பூரில் போலி சான்றிதழுக்காக பணம் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி!

Wang Sheng Design & Build எனும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் Ko Woei Hin என்பவர் கடந்த 2016- ஆம் ஆண்டு ஏப்ரலில் அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கட்டுமான பாதுகாப்பு மேலாளர் பயிற்சி சான்றிதழ் பெறுவது எப்படி என்பது தமக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

அந்த ஊழியர் கோவிடம் இவ்வாறு கூறியதாக மனிதவள அமைச்சகம் சொன்னது.

போலி சான்றிதழ் இருந்தால் அவளுடைய நிறுவனத்துக்கு பணிபுரிய வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளுக்கோ, தேர்வுக்கோ செல்ல வேண்டியது இருக்காது என்பதை மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது.

போலிச் சான்றிதழ்களுக்காக கோ அந்த ஊழியரிடம் இரண்டு போலிச் சான்றிதழுக்கு 500 வெள்ளி எனும் அடிப்படையில் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதியானது தொடர்ந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டது.

அவருடைய நடவடிக்கை சட்டவிரோதமானது, இது வேலையிட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது.

அவர் அந்த குற்றத்தை சும்மா ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனால் கோ வுக்கு 3 வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.