மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிங்கப்பூரர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!!

மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிங்கப்பூரர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!!

மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயதான ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 12ஆம் தேதி அன்று நடந்தது.

தீயணைப்பு துறையினருக்கு மதியம் 1 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த நபரின் உடலில் காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நபர் மார்ச் 9ஆம் தேதியன்று காணாமல் போனதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் கார் பள்ளத்தாக்கில் விழுவதற்கு முன்பு விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.