Singapore News in Tamil

சிங்கப்பூரில் இறந்து கிடந்த குழந்தை சடலம் கண்டெடுப்பு!

சிங்கப்பூரில் மார்ச் 29-ஆம் தேதி (நேற்று) குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று 11 மணியளவில் அதிகாரிகளுக்கு ஹவ்காங் அவென்யூ 1 இல் உள்ள பிளாக் 166 யிலிருந்து அழைப்பு வந்தது.

அங்கு சென்ற அதிகாரிகள் குழந்தையின் உடல் ஒன்று வீடமைப்பு வளர்ச்சிக்கழக பிளாக் ஒன்றின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளரால் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு 18 வயது பெண் காவல்துறைக்கு உதவி வருவதாக தெரிவித்தது.

குழந்தையின் இறப்பில் சந்தேகத்துக்குரியதாக இருப்பதால் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.