ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குமுன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்பு!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் 149 பேர் உயிரிழந்தனர் என்றும், இரண்டு பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, காணாமல் போன அந்த இருவரின் உடல்கள் கிங்காயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 200,000 வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீடுகள் மீண்டும் கட்டப்படும் என்றும், சேதமடைந்த வீடுகள் சீரமைக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.