விருந்தினர்களின் எடையை தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பால்கனி!!

விருந்தினர்களின் எடையை தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பால்கனி!!

தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில், இரண்டாவது மாடியில் உள்ள ஒரு பால்கனி இடிந்து விழுந்தது.

இச்சம்பவம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று காலை 7.30 மணியளவில் நடந்தது.

இந்த விபத்தில் 12 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த பால்கனியில் இருந்த சுமார் 40 விருந்தினர்களின் எடையை தாங்க முடியாமல் அது இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்.