SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?

SK உடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை.. காரணம் என்ன..?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.பின்பு பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மெரினா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தனுஷின் நண்பராக `3′ படத்தில் கமிட் ஆனார். பின்னர் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் உள்ளிட்ட அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.

சிவகார்த்திகேயன் தன் சொந்த முயற்சியில் முன்னேறியவர் நாளையே இவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த படம் அயலான். தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை 2010 ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எஸ்.கே தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் பற்றிய தகவல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தில் முதலில் கமிட்டாகியவர் ஸ்ருதிஹாசன் என்று கூறுகிறார்கள்.படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தபோது, ​​ஒரு சிறிய ஹீரோவுடன் நான் எப்படி நடிப்பேன் என்று கேட்டு சிவகார்த்திகேயன் கூட ஜோடி சேர மறுத்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் ஒருமுறை கமல்ஹாசனை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால் ஸ்ருதிஹாசன் சம்பளம் இல்லாமல் கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார்.ஆனால் சிவாவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.