சாலையில் வந்த எருமையால் நடந்த விபரீதம்!! ஆடவர் ஒருவர் உயிரிழப்பு!!

சாலையில் வந்த எருமையால் நடந்த விபரீதம்!! ஆடவர் ஒருவர் உயிரிழப்பு!!

மலேசியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் 53 வயதுடைய நபர் ஒருவர் எருமை மீது மோதியதில்
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த நபர் ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். இது குறித்த தகவலை ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 25 அதிகாலை 3.40 மணியளவில் ஜாலான் சுங்கை திராம் பகுதியில் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக வந்து கொண்டு இருந்த எருமை மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருள் சூழ்ந்த வேளையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஆடவர் எருமை மீது வேகமாக மோதுவதைக் காட்டும் வீடியோவானது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இதில், மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாக உடைந்து கிடப்பதை காணலாம்.