தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார்.
பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார்.
அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.
கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த Kodai Naraoka வை வெற்றிக் கண்டார்.காலிறுதிச் சுற்று வரை தகுதிப் பெற்றார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு 5 போட்டிகளில் இறுதிச் சுற்று பங்கேற்றுள்ளார்.உலகத் தரவரிசைப் பட்டியலில் தே 30 ஆம் இடத்தில் உள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan