ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!!

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!!

சிங்கப்பூரில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் அக்டோபர் 3-ஆம் தேதி(இன்று) வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு மோசமான சாலை விபத்து ஏற்பட்டது.கிட்டத்தட்ட 9 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து நடந்தது.

இதனால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.

சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் Fort Road Exit க்கு பின் நேர்ந்தது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.20 மணியளவில் அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

நான்கு பேர் ராபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

Tanjong Katong Road Exit க்கு முன் நடந்த விபத்து காரணமாக Fort Road exit வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்பிரஸ்வேயின் முதல் இரண்டு பாதைகளைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.