தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!!

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!!

தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி என்ற நகரத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த வெடிவிபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வெடி விபத்தின் போது கட்டிடத்தில் 50 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பலர் கட்டிடத்தில் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறினர்.