PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!!

PIE விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! இரு கார்கள் தீப்பிடித்தது!!

தீவு விரைவுச்சாலையில் (PIE) 4 கார்கள் சமந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் இரு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி(நேற்று) இரவு சுமார் 10.15 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது.

தகவல் அறிந்தவுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

அவர்கள் தண்ணீர் பீய்ச்சும் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ SGRV முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று 8 World செய்தித்தளம் வெளியிட்டது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg