வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!!

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!!

குவைத்தின் தெற்கு மங்காய் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் 49 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த இந்தியர்களில் இருவர் தமிழர் என்று கூறப்படுகிறது.

கட்டிடத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு கிட்சேனில் தீ மூண்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த கட்டிடத்தில் சுமார் 160 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கிருந்த தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றி கொள்வதற்காக 5-வது மாடி தளத்தில் இருந்து குதித்து ஒரு சிலர் இறந்ததாக சம்பவ இடத்தில் இறந்தவர்கள் கூறினர்.

இச்சம்பவத்தை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் இணையமைச்சர் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயங்கர விபத்திற்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.