Pre-School இல் வரிசையில் அமரவைப்பதற்காக சிறுமியை உதைத்த ஆசிரியர்!!

Pre-School இல் வரிசையில் அமரவைப்பதற்காக சிறுமியை உதைத்த ஆசிரியர்!!

சிங்கப்பூரில் ஆசிரியர் ஒருவர் 5 வயது சிறுமியை வரிசையாக அமர வைப்பதற்காக சிறுமியின் வலது தாடையில் உதைத்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்தது.

சிறுமிக்கு காயம் இருப்பதைக் கண்ட அறிந்த பெற்றோர் அன்றைய நாளே காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் சிறுமிக்கு ஒரு செ.மீ அளவிலான ரத்தக் கசிவு அல்லது வலது தாடையில் மோசமான காயம் இருப்பதாக கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது.

இச்சம்பவத்தை அடுத்து பெற்றோர் குழந்தையை வேறு பள்ளிக்கு பெற்றோர் மாற்றினர்.

இச்சம்பவத்தை அடுத்து முன்பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க எல்லாம் முன்பள்ளி தாலாளர்களும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ECDA கூறியது.
டாலர் பள்ளியின் நிறுவனம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற முறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறியது.