டாக்ஸி கவிழ்ந்து விபத்து…!!!ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனையில் அனுமதி…!!!

டாக்ஸி கவிழ்ந்து விபத்து...!! மருத்துவமனையில் இருவர் அனுமதி!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ஏர்போர்ட் புலவார்ட் சாலையில் டாக்சி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டாக்சி ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டாக்ஸியின் ஓட்டுநருக்கு 65 வயது என்றும் அதில் பயணித்த பெண் பயணிக்கு 47 வயது என்றும் தெரியவந்துள்ளது.

இருவரும் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று (பிப்ரவரி 17) காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஜூவல் மாலுக்கு டாக்ஸி சென்று கொண்டிருந்த போது சறுக்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பாக முகநூல் பக்கத்தில் வெளிவந்த படங்களில், ஒரு விளக்கு கம்பம் சாலையில் விழுந்து கிடப்பதைக் காண முடிகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan