கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!!

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தைவான் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) Far East Plaza ஷாப்பிங் மாலில் உள்ள மொபைல் கடையில் டெபிட் கார்டு மோசடி சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபர் திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி தொடர்பு இல்லாத முறையைப் பயன்படுத்தி பல இடங்களில் சட்டவிரோதமாக பொருட்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் கிரெடிட் கார்டு மோசடி செய்து 1,110 வெள்ளி மதிப்பிலான Razer Gold eGift கார்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் அந்த நபரிடம் இருந்து கார்டுகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சம்பவத்தன்று சந்தேக நபர் சிங்கப்பூர் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் வெளிநாட்டு குற்றக் குழுவிற்கு உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று (பிப்ரவரி 28) அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg