துப்பாக்கி சூடு சம்பவம்!! இரண்டு பேர் மரணம்!!

டிசம்பர் 11ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் சியோன் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நகரின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய பெண் மற்றும் 41 வயதுடைய ஆண் கொல்லப்பட்டனர். மேலும் 49 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.