வேலையிடத்தில் விபத்து!! ஐந்து பேர் மரணம்!!

டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஸ்வீடனில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ஐந்து பேரும் லிஃப்ட்டுக்குள் இருந்ததாகவும், லிஃப்ட் சரிந்து கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயங்களுடன் இறந்ததாகவும் அவர்கள் கூறினர். விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.