#malasiya

சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இருவருக்கு நேர்ந்த விபரீதம்!!

டிசம்பர் 22-ஆம் தேதி ( நேற்று) ஜொகூரில் உள்ள தஞ்சோங் குப்பாங்கின் டோல் கேட்டில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மலேசியா காவல்துறை தெரிவித்தது. லாரியுடன் மோதியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு வேலை பார்ப்பதற்காக இருவரும் வந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தால் அவர்கள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி …

சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இருவருக்கு நேர்ந்த விபரீதம்!! Read More »

பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!!

மலேசியாவின் பெனாங் மாநிலத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் பெனாங்கில் உள்ள பட்டர்வர்த் நகரில் 42 வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிறகு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் டிசம்பர் 19ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பாலத்தில் இருந்து குதித்த அந்த நபரை மீனவர்கள் காப்பாற்றினர். பிறகு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை சம்பவம் …

பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் நபர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!! Read More »

17 வயது பள்ளி மாணவனை கொன்றதாக மூத்த காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு!!

மலேசியாவில் 17 வயதுடைய மேல்நிலைப்பள்ளி மாணவனை கொன்றதாக, 44 வயதான துணைக் காவல் கண்காணிப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் டிசம்பர் 15ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. துணைக் காவல் கண்காணிப்பாளர் தனது காரைக் கொண்டு அந்த மாணவனின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மாணவனுக்கு மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டன.அவரது மரணத்திற்கு அதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து நடப்பதற்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக உள்ளூர் …

17 வயது பள்ளி மாணவனை கொன்றதாக மூத்த காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு!! Read More »

மீண்டும் கொரோனா பரவலா? முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாடு!!

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் …

மீண்டும் கொரோனா பரவலா? முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாடு!! Read More »

மலேசியாவில் அறிவிக்கப்பட்ட தடை!! மலேசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 31 பேர்!!

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் உள்ள பின்டாங் ஹிஜாவ் வனப்பகுதியில், சட்டவிரோதமாக கனிம வளங்களை தோண்டி எடுக்க முயன்ற 31 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் 21 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.21 பேரில் 16 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் வியட்நாமை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் …

மலேசியாவில் அறிவிக்கப்பட்ட தடை!! மலேசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 31 பேர்!! Read More »

மலேசியாவில் மூன்று பேரை கொன்ற புலி!! புலிகளை கூண்டோட பிடிக்க தீவிரம்!!

மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான Kelantan-ல் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து புலிகளை பொறிவைத்து பிடித்து, இடமாற்றம் செய்ய தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகளை பிடிக்க அப்பகுதியில் 11 கூண்டுகள் மற்றும் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூண்டுகளுக்கு அருகில் உயிருள்ள ஆடுகளை கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இருந்து 5 பேரை புலி தாக்கியுள்ளது.அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மலாய புலி மலேசியாவின் தேசிய விலங்காகக் …

மலேசியாவில் மூன்று பேரை கொன்ற புலி!! புலிகளை கூண்டோட பிடிக்க தீவிரம்!! Read More »

கட்டுமான கோர விபத்து!! மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்த சோகம்!!

நவம்பர் 28ஆம் தேதி அன்று Penang-ல் கட்டுமானத்தில் இருந்த கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு தொழிலாளர்கள் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் நான்கு தொழிலாளர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இறந்தவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக …

கட்டுமான கோர விபத்து!! மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்த சோகம்!! Read More »

யானை குட்டி மீது மோதிய கார்!!கோவமடைந்த யானை கூட்டம்!!காருக்குள் சிக்கிய மூவர்!!அடுத்து என்ன நடந்தது!!

நவம்பர் 26 ஆம் தேதி அன்று இரவு 7:35 மணியளவில் மலேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின. வாகனத்தில் தம்பதி மற்றும் அவர்களது 23 வயது மகன் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் பினாங்கில் இருந்து தெரெங்கானுவில் உள்ள ஜெர்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். வாகனத்தை 48 வயதான தந்தை ஓட்டினார். வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த யானைக்கூட்டத்தில் உள்ள ஒரு குட்டியின் மீது அவர் மோதினார். …

யானை குட்டி மீது மோதிய கார்!!கோவமடைந்த யானை கூட்டம்!!காருக்குள் சிக்கிய மூவர்!!அடுத்து என்ன நடந்தது!! Read More »

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்……

அக்டோபர் 28ஆம் தேதி அன்று மதியம் மூன்று மணியளவில், மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் உள்ள Megah Rise மாலின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு மாலில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றனர். இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும், கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. …

பலத்த மழை, காற்றால் இடிந்து விழுந்த மாலின் மேற்கூரை…… அலறி அடித்து ஓடிய மக்கள்…… Read More »

Latest Tamil News Online

மலேசியா விமான நிலையத்தில் ஊழல் நடக்கிறதா?

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி, நாட்டின் நுழைவுப் புள்ளிகளில் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாள்வதில் குடிவரவு அதிகாரிகள் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். சீனாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் KLIA இல் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பயண ஆவணங்கள் சரியாக இருந்தபோதிலும், அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல மறுத்தனர். நாட்டிற்குள் அனுமதிக்க …

மலேசியா விமான நிலையத்தில் ஊழல் நடக்கிறதா? Read More »